கியூபாவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
1960 ஜுலை 21 ஆந் திகதி உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தெரிவு செய்யப்பட்டார். 1971 இல் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 26 ஆவது அமர்வில் அவர் உரையாற்றினார்.
1960 ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினராக சிலோன் தெரிவு செய்யப்பட்டது. சிலோனிலிருந்து சேர் க்ளெடி கொரயா அவர்கள் 1960 மே மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின முதலாவது தலைவரானார்.
கொங்கோ ஜனநாயக குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைக்கு ஆறு அமைதிகாப்பாளர்களை ஈடுபடுத்தியதனூடாக 1960 இல் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் நடவடிக்கைக்கு இலங்கை அதன் முதலாவது பங்களிப்பை வழங்கியது.
பிலிப்பைன்ஸ் உடனான இராசதந்திர உறவுகள்
ஐரோப்பிய ஆணைக்குழுவுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1956 ஜுலை 26 ஆந் திகதி மாலைதீவு குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் யூ தான்ட் அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது 1967 ஏப்ரல் 10 ஆந் திகதி கொழும்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான கட்டிடம் திறக்கப்பட்டது.

